Pages

. அன்புள்ள (இளைய)ராஜாரசிகர்களுக்கு வணக்கம் . இந்த வலைப்பதிவை காணவரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். இந்த வலைப்பதிவில் நீங்கள் எதிர்பார்தவை கிடைக்கும் என நம்புகிறேன். இந்த சுகமான சுமையை இன்னும் நெடுதூரம் எடுத்து செல்ல உங்களின் வாழ்த்துக்களும் கருத்துரைகளும் வழிதுணையாய் வரும் என எதிர்பார்க்கிறேன். நன்றி...

ராஜாரசிகர்கள்

SONG TODAY-VELAI ILLATHAVANTHAN-VELAIKKARAN

rajarasigan.blogspot.com - Velaiyillathava

Wednesday, March 28, 2012

MANO 25 YEARS OF MUSICAL JOURNEY





1986ஆம் ஆண்டு வெளிவந்த 'பூவிழி வாசலிலே' படத்தில் இடம் பெற்ற 'அண்ணே அண்ணே நீ என்ன சொன்னே' என்ற இளையராஜாவின் இசையில் உருவான பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகராக அறிமுகமான மனோ, இதுவரை 16 மொழிகளில் 22000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி வருகிறார்.

இவருடைய குரலில் ஒலித்த சின்ன தம்பி படத்தில் இடம்பெற்ற 'அட உச்சஞ்தலை உச்சியிலே', 'தூளியிலே ஆடவந்த', நாயகன் படத்தில் இடம்பெற்ற 'நீ ஒரு காதல் சங்கீதம்',எங்க ஊரு பாட்டுகாரனின் செண்பகமே செண்பகமே போன்ற புகழ்பெற்ற பாடலகளோடு சமீபத்தில் வெளியான மங்காத்தா படத்தில் இடம்பெற்ற 'மச்சி ஓப்பன் தி பாட்டில்' உள்ளிட்ட பல பாடல்கள் இன்றும் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்த பாடல்களாகும்.
ஒரு பாடகராக மட்டும் இன்றி ஒரு நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் மனோ. கமல்ஹாசனுடன் இணைந்து 'சிங்கார வேலன்' படத்தில் நடித்த மனோ, 250 நாடகங்களிலும், 3000 இசை நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றிருக்கிறார்.

தமிழ் திரையுலகில் மனோ காலடி எடுத்து வைத்து 25 வருடங்கள் ஆகின்றது. மனோவின் இந்த 25 வருட கலையுலக சாதனையைப் பாரட்டும் வகையில், 'சாதகப் பறவைகள்' சங்கருடன் இணைந்து 'கல்யாணகல்பா' நிறுவனம் சென்ற ஜனவரி 26ஆம் தேதி 'மனோ-25' என்ற தலைப்பில் பிரமாண்டமான ஒரு விழாவை நடத்தி முடித்தார்கள்

சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 'சாதகப் பறவைகள்' இசைக் குழுவினர் மனோவின் பாடல்களுக்கு இசையமைக்க, பிரபல பாடகர்களும், பாடகிகளும் பாடி அசத்தினார்கள். மேலும் மனோவைப் பாராட்டி பேசுவதற்காக தயரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர், நடிகைகள், பின்னணி பாடகர், பாடகிகள், இசையமைப்பாளர்கள் என ஏராளமான திரையுலக பிரமுகர்கள் ஆர்வமுடன் கல‌ந்து கொண்டார்கள்.

விஜய் TVயில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியை பார்க்க தவறியவர்கள் இந்த வீடியோவில் கண்டுகளிக்கலாம்..





Tell a Friend

Friday, March 23, 2012

THENDRAL VARUM THERU FILM REWIEW


தென்றல் வரும் தெரு




கல்லூரி வாழ்க்கையை நினைவுபடுத்தும் கதை..அழகான தலைப்பு.
இசை இசைஞானி இளையராஜா.
படத்தில் ரமேஷ் அரவிந்த் ,கஸ்தூரி மற்றும் அபிமான நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படத்தின் கதை ,திரைக்கதை ,வசனம் ,பாடல்கள் ஆகியவற்றை கவிஞர் மு.மேத்தா கவனிக்க தினேஷ் குமார் ஒளிப்பதிவிற்காகவும்
சண்முகம் எடிட்டிங்காகவும் பொறுப்பேற்றிருக்கிறார்கள்..இயக்கம் கௌரி மனோகர்

கல்லூரியை சுற்றிவரும் கதையில் கல்லூரி Chairman ஆக போட்டியின்றி தேர்வாகிறார் கஸ்தூரி.அதேகல்லூரியில் படிக்கும் கவிஞன் ரமேஷ் அரவிந்த்.
ஒருவருக்கொருவர் விரும்புகிறார்கள் ஆனால் சொல்லிகொள்ள முடியவில்லை...

தந்தியில் சொல்ல நினைத்த காதலன் ,தந்தியை அனுப்பிவிட்டு வருகையில் கஸ்தூரி தன் திருமண பத்திரிக்கையை நீட்டுகிறார்...இதுக்கு மேல் என்னென்ன நடக்கும் என்று ஒரு சாதாரண சினிமா ரசிகனால் கூட கதையை கணித்து விடலாம்.

ஒரே ஒரு காட்சியை கூட நாம் சினிமா பார்ப்பதை நினைவு படுத்தவில்லை.மாறாக இந்த படத்திற்காக நாம் வீணாக்கிய நேரத்தையும் செலவு செய்த பணத்தையும் தான் நினைவுபடுத்துகின்றன.
சந்தோஷபடும் ஒரே விஷயம் இசைஞானி ..
படத்தையே இசைஞானியின் போட்டோவை முதன்மை கொண்டுதான் துவங்குகிறார்கள்.


பாட்டுக்கள் அத்தனையும் மெஹா hit ...அந்த காலத்தில் மட்டுமல்ல ..இந்த காலத்திலும் ....இந்த படத்தின் காட்சிகள் சரியில்லாத காரணத்தினாலோ என்னவோ தலைவரின் ஈடுபாடு பின்னனி இசையில் குறைவாகவே இருந்தது.ரமேஷ் அரவிந்தும் கஸ்தூரியும் சொன்னதை செய்து விட்டு போகும் பொம்மைகளாக காட்சியளிக்கின்றனர்.சின்னி ஜெயந்த் ,சார்லி என கல்லூரி பட்டாளங்களே நடித்திருந்தாலும் ஆர்வமோடு எதிர்பார்த்த கல்லூரி கலாட்டாக்களும் missing..


மொத்தத்தில் இந்த படத்தை பார்த்துவிட்டு ஒரு முறை பார்க்கலம்...சுமார்....its ok...Nice film ..
 என்றெல்லாம் ஒருவர் சொன்னால் அவருக்கு கோயில் கட்டி கும்பிட வேண்டும் இந்த படத்தின் இயக்குனர் கௌரி மனோகர்..


இதோ அந்த படத்தின் பாடல்கள்...






பாடல்களை கேட்கவும் செய்து கொள்ளவும் இங்கே செல்க‌

Thendral Varum Theru - Shakthi.fm Listen, Download & Enjoy Tamil, Hindi MP3 Songs & Albums


இந்த படத்தை பற்றி இன்று நாம் கவனிக்க காரணம் அதில் நம் தலைவரின் பெயர் இசை என்ற பொறுப்புக்கு கீழே வருவதால்தான்... 




Tell a Friend




Sunday, March 18, 2012

SINGER P.JEYACHANDRAN HITS PART 2

தன் வாழ் நாளில் 10000 க்கும் மேற்பட்ட பாடல்கள் மூலம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என அனைத்து மொழிகளிலும் தன் இசையால் மக்களின் மனங்களை கொள்ளை கொண்டிருப்பவர் பாடகர் ஜெயசந்திரன்.

பாடகர் ஜெயசந்திரன் அவர்கள் தமிழில் சுமார் 400க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார்.
இசைஞானியோடு அவர் இணைந்த பாடல்கள் மட்டும் 100க்கும் மேற்பட்டவை.
தலைவர் இசையில் பாடகர் ஜெயசந்திரன் அவர்கள் பாடிய பாடல்களின் ஒரு பாகத்தை முந்தைய பதிவில் பார்த்தோம்..
இந்த இரண்டாம் பாக பாடல்கள் அனைத்துமே தமிழ் நாட்டு மக்களால் அதிகம் ரசிக்க பட்டவை ...ரசிக்க படுகிறவை..


திரு.ஜெயச்சந்திரன் அவர்கள் பாடிய பாடல்களின் வீடியோ தொகுப்பு..




கேரளத்தில் பிறந்து சென்னையில் குடியேறியிருக்கும் ஜெயச்சந்திரன் ,படிக்கும்போதே மிருதங்கத்தில் அதீதமான ஈடுபாடும்..அதற்கான பல பரிசுகளையும் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

மென்மையான குணத்தையும் ..இசை அமைப்பாளர்கள் அனைவரருடனும் இணக்கமான போக்கை கடைபிடிக்கூம் பழக்கத்தையும் இயல்பாகவே கொண்டவர் பாடகர் ஜெயசந்திரன் . சமீபத்தில் இசை நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்ட ஜெயச்சந்திரன் அவர்கள் ஒரு பாடகர் கொலவெறி பாடலை பாட முயல ..இவர் தன் எதிர்ப்பை வெளியேற்றம் மூலம் வெளிபடுத்தியிருக்கிறார்.இசையுடன் தன்னையே இணைத்து கொண்ட ஒரு பாடகன் ..இசைதாயை கலங்க படுத்த ஒருவன் முயலும் போது உண்டாகும் நியாயமான கோபம் இது..





பாடல்களை கேட்டு மகிழ‌..







திரு ஜேசுதாஸ் அவர்களை முதன்முதலில் கேரளா அரசு நடத்திய STATE YOUTH FESTIVAL இல சந்தித்திருக்கிறார் திரு ஜெயச்சந்திரன் அவர்கள்.
அந்த விழாவில் ஜேசுதாஸ் அவர்கள் சிறந்த கர்நாடக இசை பாடகர்கருக்கான விருதையும் ,ஜெயச்சந்திரன் அவர்கள் சிறந்த மெல்லிசை பாடகருக்கான விருதையும் பெற்றிருக்கிறார்கள். அன்றைலிருந்து அண்ணன் தம்பிகளாக பழக ஆரம்பித்த இவர்களுக்கு இறைவன் கொடுத்த வரமாக குரலும் ஒத்து போனது.
இன்றைக்கும் "அவள் அப்படித்தான்" படத்தின் 'உறவுகள் தொடர்கதை' பாடலை ஜெயச்சந்திரனை நினைத்து கேட்டால் அவர் பாடியதை போலவே இருப்பது அதிசயத்தில் நம்மை ஆழ்த்துகிறது.




தரவிறக்கம் செய்து கொள்ள‌..
Kaathal Thiruda Periya Kaathal Thiruda.mp3
Pagal Nilavu - Poovilae.mp3
Pillai Nila - Raaja Magal.mp3
Pon Vizhangu - Indha pachai kili.mp3
Pon Vizhangu - Oru cholaikili.mp3
Ponnuketha Purushan - Devathai vanthaal.mp3
Puthumai Penn - Kaathal Mayakam Azhgiya Kangal Thudikkum Ithu Oru Kaathal Mayakam.mp3
Sevanthi - Semmeenay.mp3
Solla Thudikkuthu Manasu - Enathu vizhi.mp3
Sonnadhu Needhana - Velli Nilaavinile.mp3
Soorakottai Singakutti - Kalidasan.mp3
Thaluvaatha Kaigal - onna rendaa.mp3
Thaluvaatha Kaigal - Thottup Paaru Kuththamillai Jathi.mp3
Thaluvaatha Kaigal - Vizhiye Vilakkondru.mp3
Thambikku Oru Paatu - Thaimaasam.mp3
Ullam Kavarntha Kalvan - En Manasai Parigodutha.mp3
Ullam Kavarntha Kalvan - Nadirukkum Nilamai.mp3
Unnai Naan Santhithean - Devan Thantha Veenai Athil Devi Seitha Gaanam- [Jeyachandran, S.Janaki].mp3
Urudhi Mozhi - Athi Kaalai Nilave.mp3
Vaithegi Kathirunthal - Indraikku Ean.mp3
Vaithegi Kathirunthal - Kathirunthu_2.mp3
Vaithegi Kathirunthal - Raasathi Unnai (Jeyachandran).mp3


நம்முடைய facebook இணைய நண்பர் Murugesan Saravanan  ஜெயச்சந்திரன் அவர்களின் கிடைப்பதற்கரிய பாடலான வள்ளி வள்ளி என வந்தான் பாடலை நமக்கு பரிசாக தந்தார்.அவருக்குறிய நன்றிகளுடன் இந்த பாடலை இங்கே பதிவிடுகிறேன்











நம்முடைய வாழ்வில் பல்வேறு மறக்க முடியா நிகழ்ச்சிகளை தாங்கி கொண்டிருக்கிற ஜெயச்சந்திரன் அவர்களின் பாடல்களுக்கு நாம் நன்றி சொல்லும் அதே வேளையில் சிறப்பான பாடல்களை நமக்கு தந்த ஜெயச்சந்திரன் அவர்கள் நூறாண்டுகள் எல்லா வளமும் பெற்று பெருவாழ்வு வாழவும் வாழ்த்துவோம்



Tell a Friend

Related Posts Plugin for WordPress, Blogger...