காமெடி நடிகர் மயில்சாமி பற்றி தெரியாதவர்கள் இருக்கமுடியாது.
இவர்
நம் தலைவரின் தீவிர ரசிகர், இதை தெரிந்தவர்கள் அவ்வளவாக இருக்க முடியாது.
ஒவ்வொரு பிறந்த நாள் அன்றும் மயில்சாமி அவர்கள்தான் முதல் மாலை போட்டு
வாழ்த்து சொல்வாராம்.
மாலை என்றால் பூ மாலை அல்ல ஒவ்வொரு இசைக்கருவியால் கோர்த்த மாலை.
ஒவ்வொரு ஆண்டு பிறந்த நாளன்றும்
தலைவருக்கு
மாலை போட யார் வந்தாலும் மயில்சாமியின்
மரியாதையை வாங்கி கொண்டுதான் அடுத்த நிகழ்ச்சிகளில் பங்கு ஏற்கிறார் இசைஞானி.
பலவருடங்களுக்கும் மேலாக முதல்
ஆளாக வந்து மரியாதை செய்வதை வழக்கமாக வைத்துள்ளார் மயில்சாமி அவர்கள்
நன்றி தமிழகஅரசியல் வார இதழ்
A.ABIRAM
தமிழ் நாட்டின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் போக தலைவரை தெய்வமாகவே பார்க்கும் ஆந்திர மாநிலத்தின் பிறந்த நாள் கொண்டாட்டங்களை இங்கே பார்ப்போம் .
பிரபல இயக்குனர் திரு வாம்சி அவர்கள் தான் தலைவரை ஆந்திர மாநிலத்து மக்களுடன் இணைக்கும் பாலமாக இருந்த்தார் என்பதில் கொஞ்சமும் சந்தேகமே இல்லை.
இங்கே பிரபலமான பாடல்களின் மெட்டுக்கள் அங்கே வேறொரு அழகான சூனிலைக்கு வாம்சி பயண் படுத்தி கொள்வார் அவர் பாடல்களை காண கண் கோடி வேண்டும் ..அவ்வளவு அழகான் படத்தொகுப்புகள்
இதோ அவரே தலைவரை பற்றி பேசியதை அதுவும் தலைவருடைய பிறந்த நாள் நிகழ்ச்சியில் பேசியதை பாருங்கள்.. பரவசப்படுவீர்கள்...
மொழி தெரியவில்லை என்று யோசிக்காதிர்கள் ...இசைக்கு மொழி இல்லை.. பாருங்கள் கண்டிப்பாக பிடிக்கும்,,
தலைவரின் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் ரேடியோ மிர்ச்சியும் பெரும் பங்கு வகித்திருக்கிறது..
தலைவரை பற்றி மற்றவர்கள் பேசுவதை கேட்பதை விட தலைவரை பற்றி தலைவரே பேசுவது கூடுதல் சுவாரஸ்யம்.
ரேடியோ மிர்ச்சியின் இந்த "நீங்க நான் ராஜாசார்" நிகழ்ச்சியை கேட்க்க எனக்கு வாய்ப்பில்லாமல் போனது. ஆனால் நண்பர் கோபிநாத் அந்த குறையை தீர்த்தார் .இந்த நிகழ்ச்சியை கேட்க்கும் போது ஊரில் உள்ள சுகம் எனக்கு ..
அந்த நிகழ்ச்சியில் தலைவர் இசைஞானியின் பேட்டியோடு எனக்கு பிடித்த சில பாடல்களையும் இணைத்துள்ளேன்.. நீண்ட நாளாக ஒரு இது போன்று ஒரு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்ற ஆசை எனக்கு..
அதாவது ஒரு நிகழ்ச்சியில் என்னுடைய விருப்ப பாடல்கள் இணைத்து அதை உலகம் முழுக்க இருக்கும் தமிழர்கள் அனைவரும் கேட்டு மனம் மகிழ வேண்டும் என்பதே ஆகும்.
இந்த நிகழ்ச்சியில் வரும் பாடல்களின் துவக்க இசை (PRELUDE) ஒவ்வொன்றும் வித்தியாச.. வித்தியாசமான தாள கட்டுக்கள் மற்றும் இசை கோர்வையை கொண்டவை.. ஒரு பாடலை அவர் சாதாரண மாக வழங்குவதில்லை..முதலில் மனிதன் எந்த சூழ் நிலையில் இருந்தாலும் அவனை பாடலை கேட்கின்ற மூடுக்கு அழைத்து வருவதற்காக அவர் அமைத்திருக்கும் ஒவ்வொரு இசையும் அற்புதம்.
இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் அடங்கியது என்று நினைத்தால்... நண்பர் கோபிநாத் ரேடியோ மிர்ச்சியில் தலைவர் கொடுத்த பேட்டியை கொடுத்து ...பிறந்த நாள் கொண்டாட்டங்களை தொடங்கிவிட்டுட்டார்.நன்றி அவருக்கு..
ரேடியோ மிர்ச்சியின் பேட்டி எடிட்டிங் வேலையில் இருப்பதால் நாளை வெளியிடுகிறேன்.
தலைவரின் பிறந்த நாளை மீடியாக்கள் மக்களிடையே எப்படி கோண்டு சேர்த்திருக்கின்றன....!
உலகம் முழுக்க தலைவரின் பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடி இருக்கின்றனர் மக்கள் என்பது இந்த வீடியோவை பார்க்கும் போது தெறிகிறது...
உடம்பெல்லாம் சிலிர்க்கிறது...
தலைவரின் மூத்த ரசிகன் கமலஹாசன்,
ஹரிஹரன்,
மாதவன்,
விக்ரம்
டைரக்டர் பால்கி,
ஆஷா போஸ்லே,
என கலைஞர்கள் தலைவரின் இசையை புகந்து மகிழ்வதை கண்டு உடம்பெல்லாம் சிலிர்க்கிறது.
99 க்கும் 100க்கும் அவ்வளவு வித்தியாசங்கள் இல்லை..ஆனால் 100 என்ற எண் தான் மதிப்புமிக்கதாக இருக்கிறது. 100சதவிகிதம் என்பதுமட்டுமே முழுமையான வெற்றியை குறிக்கிறது..100 ஆண்டு வாழ்ந்தால் மட்டுமே அது நிறைவான வாழ்க்கையாக கருத படுகிறது...இன்னும் இருக்கிறது சொல்லிகொண்டே போக ...
இத்தனை பெருமைகளை கொண்ட அந்த 100 என் வாழ்க்கையில் இரண்டு முறை விளையாடி இருக்கிறது ஒன்று நான் பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் 100 மதிப்பெண் எடுத்தது..அன்றைய தினத்தில் நான் அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை ..
அதோடு இப்போதுதான்
இதோ நம் ராஜாரசிகனில் 100 நண்பர்களை followersகளாக இணைந்திருப்பது..மகிழ்ச்சி கடலில் முழ்கினேன்
"இசையால் இணைவோம் இசைஞானியை புகழ்வோம்" என்ற தலைப்புக்கேற்ற ஒரு கௌரவமான எண்ணிக்கையிலான நண்பர்கள் கூட்டம் என்றாலும் இது போதாது என்றே தோன்றுகிறது..
முயற்சி வீண் போகாது என்பது அவ்வப்போது நான் சொல்லிகொள்ளும் வாக்கியம்
சரி இப்படி நம் வாழ்க்கையின் 100ஐ விட தலைவரின் வாழ்க்கையில் எத்தனை 100கள் விளையாடி இருக்கிறது ...இல்ல.. இல்ல.. தலைவர் எத்தனை 100களோடு விளையாடி இருக்கிறார் என்பதை பார்போமா?
அன்னக்கிளியில் ஆரம்பித்த இந்த சின்ன ராஜா, முதல் செஞ்சுரியை அடித்து இளையராஜா என்ற இடத்தை நிரந்தரமாக்கியது "மூடுபனி"யில்